மண்ணச்சநல்லூர், மே 8-மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் துறையூர் எஸ்.ஆர்.எம்பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனைகளைப் புரிந்துள்ளனர்.சௌடாம்பிகா கல்விக்குழுமத்தின் அங்கமாகத் திகழும் துறையூர் எஸ்.ஆர்.எம் பப்ளிக் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆர். ரகுராம்ஸ்ரீநாத் 487 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும் டி.ரித்திக் கண்ணன், 485 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் ஏ.ஆகாஷ்ராஜ் 482 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று இளம் சாதனையாளர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளனர். இத்தகைய சாதனைகளைச் செய்து பள்ளிக்குப் பெருமை சோர்த்த இளம் சாதனையாளர்களை பள்ளியின் தலைவர் முனைவர் எஸ்.ராமமூர்த்தி, செயலாளர் ஆர்.செந்தூர்செல்வன் ஆகியோர் பாராட்டினர். மேலும் தேர்வு எழுதிய 78 மாணவர்களில் 500 மதிப்பெண்களுக்கு, 480-க்கு மேல் 3 பேரும், 450-க்கு மேல் 15 பேரும், 400-க்கு மேல் 39 பேரும் பெற்றுள்ளனர். மேலும் பள்ளியின் முதல்வர்கள் சி.ஹரி, கே.மீனாட்சி, சௌடாம்பிகா மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி முதல்வர் வி.ராமசாமி, பள்ளியின் ஆசிரியர்கள் சாதனையாளர்களை வாழ்த்தினர்.