tamilnadu

img

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை

புதுக்கோட்டை, ஏப்.29-புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 53, மாணவிகள் 14 மொத்தம் தேர்வு எழுதிய 67 பேரும் வெற்றி பெற்றுள்ளார்கள். எம்.சப்ரின்பானு, என்.நஸ்ரின்பானு, எஸ்.ஆதித்யா, ந.சி.மணிகண்டன், பை.சுவாதி ஆகியோர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.470க்கு மேல் 6 பேரும், 450க்கு மேல் 19 பேரும், 400க்கு மேல் 45 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி, பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, துணைமுதல்வர் குமாரவேல், ஆசிரியர்கள் ஸ்டீபன்சேகர், ராஜாமணி, ஜெயசுதா, பவானி, திருப்பதி, செந்தமிழ்செல்வி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, ரம்யா ஆகியோர் பாராட்டி இனிப்புகள் வழங்கினர்.

;