சீர்காழி, ஜூலை 8- சிதம்பரத்திலிருந்து மாதானம் வழி யாக சீர்காழிக்கு இயங்கி கடந்த 2014 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழியிலி ருந்து உமையாள்பதி, பச்சைபெருமா நல்லூர், மாதானம், ஆலாலசுந்தரம், ஆச்சாள்புரம் மற்றும் கொள்ளிடம் வழி யாக சிதம்பரத்திற்குச் சென்று சிதம்ப ரத்திலிருந்து மேற்கண்ட வழித்தடங் கள் வழியாக சீர்காழிக்கும் அரசு நகரப் பேருந்து தொடர்ந்து ஒரு நாளைக்கு 10 முறை வீதம் இயங்கி வந்தது. இத னால் 20 க்கும் மேற்பட்ட கிராம விவசாயி கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பெரிதும் பயன டைந்து வந்தனர். சிதம்பரம் மற்றும் சீர்காழி பகுதியிலி ருந்து உரிய நேரங்களில் கிராமங்க ளுக்குச் சென்று வர இந்த அரசு பேருந்து அனைவருக்கும் பயனுள்ளதாக இருந் தது. ஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த பேருந்து இயக்குவது நிறுத்தப் பட்டது. சாலை கரடுமுரடாக இருப்ப தாகவும் அதனால் இயக்குவது நிறுத் தப்பட்டதாகவும், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சார்பில் தெரிவிக் கப்பட்டது. இது குறித்து ஆலாலசுந்தரம் கிராம விவசாயிகள், ஐஸ்இளங்கோவன், ஊர் மக்கள் கூறுகையில், சிதம்ப ரத்திலிருந்து சீர்காழி மார்க்கமாக இயங்கி வந்து பின்னர் நிறுத்தப்பட்ட அரசு நகரப் பேருந்தை மீண்டும் உட னடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்து அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாக வும் தெரிவித்தனர்.