tamilnadu

சீர்காழி முக்கிய செய்திகள்

மானிய விலையில்  சம்பா நெல் விதை 

சீர்காழி ஆக 2- 50 சத மானிய விலையில் சம்பா நெல் விதை வாங்கி பயன்  பெற விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநர் அறி வுறுத்தியுள்ளார். நாகை மாவட்டம் கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த சில தினங்களாக சில இடங்களில் அவ்வப்பொழுது மழை பெய்து வருவதால் விவசாயிகள் உழவுப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  கொள்ளிடம் மற்றும் சீர்காழி வட்டாரங்களில் சம்பா  தாளடிக்கு ஏற்ற நீண்ட கால மற்றும் மத்திய கால டி.கே.எம்-13 கோ.ஆர் 50 சுவர்னாசப் ஆகிய ரகங்களான நெல் விதை கள் கொள்ளிடம் மற்றும் சீர்காழி வட்டாரங்களில் உள்ள  அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் போதிய இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் மேற்கண்ட நெல் விதைகளை 50 சதவிகித மானிய விலையில் வாங்கி பயன் பெறலாம் என தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

பதப்படுத்துதல் பயிற்சி

சீர்காழி ஆக 2- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கீரங்குடி கிராம த்தில் வட்டார வேளாண் துறை சார்பில் இளநீர் பதப்படு த்தும் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் தலைமை வகித்தார். அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரேகா வரவேற்றார். உதவி மேலாளர்கள் சவுந்தர்ரா ஜன், கார்த்திக் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழக வேளாண் துறை பேராசிரியர் பாபு சிறப்புரையாற்றினார். வேளாண் உதவி அலுவலர்கள் பாலச்சந்திரன், வேதையராஜன், பாரம்பரிய இயற்கை விவ சாய திட்ட அலுவலர் கலைமாறன் மற்றும் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பெண் தீக்குளித்து தற்கொலை

தூத்துக்குடி, ஆக.2- தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல், குறவர் காலனியைச் சேர்ந்தவர் முத்தையா மனைவி சங்க ரம்மாள் (55). இவரது கணவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இதன் பின்னர் இவரது மகன் இவரை சரியாக கவனிக்கவில்லையாம். இதனால் மனவேதனையடைந்த சங்கரம்மாள் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.  பலத்த தீக்காயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.