tamilnadu

img

முகக் கவசங்களை அதிக விலைக்கு விற்ற மருந்துக் கடைக்கு சீல்

புதுக்கோட்டை, மார்ச் 20- புதுக்கோட்டையில் கொரோனா பாதுகாப்பு முககவசங்களை  அதிக விலைக்கு விற்ற தனியார் மருந்த கத்தை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தார். இதுகுறித்து அவர் தெரிவித்தது: பொது மக்களுக்கு தேவை யான முககவசம், கிருமிநாசினி, கை கழுவும் திரவம் போன்ற பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் நிர்ண யிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு எச்சரித்திருந்தது. இந் நிலையில், கொரோனா தடுப்புக் கென அமைக்கப்பட்ட மருத்து வக்குழு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டது. 

ஆய்வின் போது  புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் உள்ள தனி யார் மருந்துக்கடையில் நோய் தடுக்கும் முககவசம் நிர்ணயிக்க கப்பட்ட விலையைவிட அதிக விலை க்கு விற்பனை செய்தது கண்டறி யப்பட்டது. இதனையடுத்து அத்தியா வசிய பொருட்கள் சட்டம் 1955-ன் கீழ் கடை மூடி சீலிடப்பட்டது. மேலும், பயிற்சி பெறாத மருந்தாளுனர்க ளை பணிக்கு அமர்த்தியும், மருத் துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்பப்பட் டுள்ளதும் கண்டறியப்பட்டது.

இதேபோன்று  நோய் தடுப்பு பாது காப்பு உபகரணங்களை நிர்ணயிக் கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு விற்றாலோ, பதுக்கினா லோ தொடர் ஆய்வின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்க அலுவலர்க ளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப் பாக பொது மக்கள் மருந்துகடை களில் விற்கும் கை கழுவும் திர வத்தை வாங்கி மட்டுமே பயன் படுத்த வேண்டும் என்ற கருத்து தவ றானதாகும். மாறாக வீடுகளில் சாதா ரணமாக நாம் பயன்படுத்தும் சோப்பு களை கொண்டு கைகளை கழுவி னாலே கொரோனா வைரஸ் கிருமி பரவலை முற்றிலும் தடுக்கலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.   இந்த ஆய்வின் போது அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம்,  பொதுசுகாதார துணை இயக்குநர் மரு.அர்ஜுன் குமார், கோட்டாட்சியர் தண்டாயுத பாணி, நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன், வட்டாட்சியர் முரு கப்பன் உள்ளிட்ட தொடர்புடைய  அலுவலர்கள் உடனிருந்தனர்.