மயிலாடுதுறை, மார்ச் 2- மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்களுடனான கலந்தாய்வு கூட்டம் புதனன்று நடைபெற்றது. கூட்டத்தில், குத்தாலம், கொள்ளிடம், சீர்காழி ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ் செல்வன், உதவி இயக்குனர்கள் மஞ்சுளா(, ஊராட்சிகள்) கோவிந்த ராஜ், (தணிக்கை) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கள் கலந்து கொண்டனர்.