tamilnadu

சாலையோர வியாபாரிகள் உண்ணாவிரதம்

திருச்சிராப்பள்ளி ஜூலை 6- திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள வையம்பட்டி தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் சிறு கடைகள் உணவகங்கள் கடைகள் அகற்றிக்கொள்ள நோட்டீஸ் அளிக்கப்பட்ட நிலையில் வியாபாரிகள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தடையாணை பெற்று இருப்பினும் நீதிமன்ற வழிகாட்டுதல் மீறி கடந்த 7ஆம் தேதி சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஈடுபட்டது இதை கண்டித்தும் அதே இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் வையம்பட்டி கடைவீதியில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் என்வெள்ளைச்சாமி தலைமை வகித்தார் சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி சிபிஎம் மாவட்ட செயற்குழு சிதம்பரம் ஒன்றியசெயலாளர் வெள்ளைச்சாமி விவசாய சங்க ஒன்றிய தலைவர் வீரமணி ஒன்றிய பொருளாளர் சந்தியாகு வாலிபர் சங்க முருகன் மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ராமாயி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர் உண்ணாவிரதத்தில் சாலையோர வியாபாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.