tamilnadu

img

சாலைப் பணியாளர் கையெழுத்து இயக்கம்

பெரம்பலூர், ஜூன் 16- தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு முறையீடு செய்ய கையெழுத்து இயக்கம் வெள்ளியன்று முதல் தொடங்கினர்.  பெரம்பலூர் துறைமங்கலம் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு துவங்கிய கையெழுத்து இயக்க நிகழ்ச்சிக்கு சங்க மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். கோரிக்கை முறையீடு மனுவில் சாலைப் பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து நெடுஞ்சாலை அலுவலர்கள், சாலைப் பணியாளர்கள் ஆகியோரிடம் கையெழுத்து பெறப்பட்டு கோரிக்கை மனுவினை தமிழக முதல்வர், துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் அளிக்கப்படவுள்ளது.