tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.28- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். நாட்டை பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும் பப்பெற வேண்டும். அகில இந்திய மத்திய தொழிற்சங்கங்களின் கோரிக் கைகளை வலியுறுத்தியும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் சனியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார்.  ஆர்ப்பாட்டத்தை விளக்கி தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் குணசேகர், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் துரைராஜ், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சுரேஷ், எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் ஜான்சன், ஏஐசிசி டியு தேசிகன் ஆகியோர் பேசினர். சிஐடியு மாவட்டப் பொருளாளர் வி.கே.ராஜேந்திரன், முறைசாரா தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் செல்வி, தொமுச எத்திராஜ், ராமலிங்கம், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐடியுசி, ஏஐசி சிடியு, பிஎஸ்என்எல், எல்ஐசி, டிஎன்ஜி இஏ அனைத்து தொழிற்சங்க நிர்வாகி கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

;