tamilnadu

img

ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

முசிறி ஜூலை 6- தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கையை வென்றெடுக்கும் கையெழுத்து இயக்கம் திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சிய ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு சங்க ஒன்றிய தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் காராளன், ராஜீ, செல்வராஜ், ரெங்கராஜ், காமராஜ், சின்னசாமி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு கொடுப்பதாக அளித்த வாக்குறுதிகளை தற்போதைய தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஒன்றிய பொருளாளர் பாரி நன்றி கூறினார்.