அரசு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் தலைமை அஞ்சலகம் முன்பாக இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் அன்னபாக்கியம் தலைமையேற்றார். சம்மேளனத் தலைவர்கள் கலைவாணி, வசந்தா, மாரியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.