கும்பகோணம், நவ.12- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ஊரக வேளாண் பணி அனு பவ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு துணைப் பேராசிரியர் முனைவர் இளமதி தலைமையில் அசோலா வளர்ப்பு மற்றும் நெல் வயலில் விடுவதற்கான செயல் விளக்கம் அளித்தனர். தற்போது செயற்கை உரங்கள் மண்ணின் வளத்தை அழித்து கொண்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு வேளாண் மாணவி கள் அசோலா உற்பத்தி குறித்து விவசாயிக ளிடம் விரிவாக எடுத்துரைத்தனர். அசோலா என்பது தண்ணீரில் மிதக்கக் கூடிய பெரணி வகையைச் சேர்ந்த தாவரம். இது மூக்குத்தி மற்றும் கம்மல் செடி எனவும் அழைக்கப்படுகிறது சிறிது மட்டும் வாங்கி சிமெண்ட் தொட்டியில் அல்லது சிறு குட்டையில் தெளித்தால் போது மானது. அதுவே தன்னை பெருக்கி கொள்ளும். அசோலாவானது மூன்று அல்லது ஐந்து நாட்களில் இரு மடங்காக பெருகும் தன்மை உடையது அதனால் அதனை மிகவும் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியும். இது குறித்து முனைவர் இளமதி கூறியதாவது, பொதுவாக அசோலா ஒரு ஏக்கருக்கு 100 கிலோ அளவில் தெளிக்க பரிந்துரைக்கப்படுகிறது. சிறு விவசாயிகள் 10 கிலோ அளவிலாவது நெற் பயிரில் இட வேண்டும். இவ்வாறு தெளிப்ப தன் மூலம் காற்றில் இருக்கும் தலை சத்தினை கிரகித்து பயிருக்கு உரமாகிறது இதில் 4.5 சதவிகிதம் தழைச்சத்து உள்ளது. இதனால் பயிருக்கு தழைச்சத்து கிடைப்ப தோடு 15 முதல் 20 சதவிகித மகசூல் உயரும் அத்துடன் அசோலா ரசாயன உரம் இல்லா ஒரு மாற்று தீவனமாக விளங்குவதால் அனைத்து வகை கால்நடைகளுக்கும் ஒரு தீவனமாக அமை கிறது. இதனைக் கால்நடை மற்றும் கோழிகளுக்கு புரதச் சத்து மிகுந்த தீவனமாக பயன்படுத்தி உற் பத்திச் செலவினை குறைக்க முடியும் என்றார். வேளாண் மாணவிகள் லாவண்யா, சமதக்கினி, தேவி, ஜமுனா, தேவி, சிந்து, சங்கீதா, கௌரி, பிரியதர்ஷினி, அஞ்சு, ஸ்ரீ வர்ஷா, ஆகியோர் நெல் வயலில் அசோலா தெளிக்கும் முறையை செயல் விளக்கம் செய்து காட்டினர்.