tamilnadu

கரூரில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க கோரிக்கை

கரூர், மே 3-விவசாயிகள் சங்க மாவட்டக்குழு கூட்டம், ஆர்.பிச்சைமுத்து தலைமையில் கரூரில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் பி.இலக்குவன், மாவட்ட துணை செயலாளர் சி.ராஜாங்கம், மாவட்ட நிர்வாகிகள் கே.பாலசுப்ரமணி, கே.சக்திவேல், எம்.பி.ரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் பஞ்சத்தை தீர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள பெரிய ஏரிகளான தாதம்பாளையம் ஏரி, வெள்ளியணை குளம், பஞ்சப்பட்டி ஏரி, மாவத்தூர் குளம், கழுகூர், கூடலூர்குளம் ஆகியவற்றிற்கு காவிரி ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம் நீர்ப்பாசன திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

;