tamilnadu

img

இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான ஜிஎஸ்டியை நீக்க கோரிக்கை

கும்பகோணம், ஜூன் 7- காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க ஆண்டுப் பேரவை கிளை 1, 2 சார்பில் கும்பகோணத்தில் நடை பெற்றது. பேரவைக்கு கிளை தலைவர் பாலசுப்பி ரமணியன் தலைமை வகித்தார். கோட்ட தலைவரும் தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கூட்டமைப்பு துணைத் தலைவருமான ஆர்புண்ணியமூர்த்தி கோட்ட சங்க பொது செயலாளர் செல்வராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.  சங்கப் பிரதிநிதிகளாக கிளை-1ல் பாலசுப்ரமணியன், கண்ணன், லதா ,கங்கா ஆகியோரும், கிளை-2ல் சுப்ரமணியன், சேகர், சுரேஷ், புருஷோத்தமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கோட்ட தலைவர் ஆர்புண்ணியமூர்த்தி இம்மாத இறுதியில் எல்ஐசி பணியிலிருந்து இருந்து ஓய்வு பெறுவதை ஒட்டி சங்கத்தின் சார்பில் புண்ணியமூர்த்திக்கு சிறப்பு செய்து பாராட்டி கௌரவிக்கப்பட்டார். பேரவையில், இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான ஜிஎஸ்டி நீக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை உடன் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.