tamilnadu

முந்திரி விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க கோரிக்கை

அரியலூர், ஜூன் 8- அரியலூர் மாவட்டத்தில் செந்துறை உடையார்பாளையம் ஆண்டிமடம் ஆகிய மூன்று தாலுகாவிலும் 80ஆயிரத்து 600 ஏக்கரில் முந்தரி விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்தசில ஆண்டு காலமாக பருவ மழை குறைந்த நிலையில் முந்திரி மகசூல் குறைந்தது. இந்த ஆண்டு முழுவதும் பாதிக்கப்பட்டு முந்திரி மரம் கூட வெப்பத்தினால் காய்ந்து விட்டது. கடந்த ஆண்டு 80 கிலோ எடை கொண்ட முந்திரி கொட்டை 12 ஆயிரத்திற்கு விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு காய்ந்த முந்திரியில் கிடைத்த கொட்டையினை விற்பனைக்கு கொண்டு வரும் போது 80 கிலோ கொண்ட முந்திரி மூட்டை தற்போது 7 ஆயிரம் விலை போகிறது என்றும் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள அரியலூர் மாவட்டத்தினை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். முந்திரி விவசாயிகளுக்கும் தமிழக அரசு உரிய அலுவலர்கள் நியமித்து கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட வெயலாளர் கே.மகாராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.