திருச்சிராப்பள்ளி, செப்.23- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்தாளப்பேட்டை கிளை செய லாளர் தமிழ்செல்வன் ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருந்ததாவது: திருச்சி மாவட்டம் பத்தாளப்பேட்டை கிராமத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் குடிமனை வழங்கப்பட்டது. அங்கு இதுவரை ஒருவரும் வீடுகட்டி குடியிருக்க வில்லை. இதற்கான காரணம் 5 சென்ட் குடிமனையோடு அரசு இலவசமாக கட்டி கொடுத்துள்ள காலனி வீடு உள்ளோர்க்கும், குடியிருக்க இடம் உள்ளவர்களுக்கும், குடிமனை வழங்கப் பட்டுள்ளது. மேற்படி மனைகளை ஒரு தனிநபர் குறைந்த விலைக்கு வாங்கி ஒரு மனை ரூ 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை விற்பனை செய்து வருகின்றார். மேற்படி இடத்தை ஆய்வு செய்து உண்மையான பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். தகுதி இல்லாதவர்களின் பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.