சீர்காழி, நவ.15- நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் உள்ளது. சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புத்தூர் கடைவீதியையொட்டி ஊராட்சிக்குச் சொந்தமான கட்டணக் கழிவறை கட்டிடம் செயல்படாமல் உள்ளது. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக இந்தக் கழிவறை கட்டிடம் செயல்படாமல் உள்ளது. பழையாறு, புதுப்பட்டி னம், மாதானம் உள்ளிட்ட இடங்கள் வழியாக புத்தூ ருக்கு வந்து அங்கிருந்து சிதம்பரம் மற்றும் சீர்காழி மார்க்கமாக செல்வோர்க ளும் சீர்காழியிலிருந்து, சிதம்பரம் மார்க்கமாக செல்வோர்களும் முக்கிய மையப் பகுதியாக இருந்து வரும் புத்தூர் கடைவீதிக்கு தினந்தோறும் செல்கின்ற னர். புத்தூருக்கு மிக அரு காமையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் புகழ் பெற்ற திருமயிலாடி சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு தினந்தோ றும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மக்கள் நடமாட்டம் அதி கம் உள்ள பகுதியில் இயங்கி வந்த ஊராட்சிக்குச் சொந்த மான கட்டண கழிவறை கடந்த ஐந்து வருடங்களாக செயல்படாமல் இருப்ப தால் அப்பகுதிக்கு வந்து செல்வோர் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு வழியில்லாமல் அவதி யடைகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி கழிவறை கட்டிடத்தை இயக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.