tamilnadu

img

பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு விற்பனையை கைவிடக் கோரிக்கை

தஞ்சாவூர் நவ.10- மதுரை மண்டல பொது இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அங்கமாகிய தஞ்சை- நாகை- திருவாரூர் மாவட்டக் குழுவின் 28 ஆவது ஆண்டு மாநாடு சனிக்கிழமை அன்று தஞ்சை யுனை டெட் இந்தியா இன்சூரன்ஸ் கோட்ட அலுவலக அரங்கில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ப.சத்தியநாதன் மாநாட்டிற்கு தலைமை வகித்தார். செய லாளர் எம்.ஜவஹர்லால் மாவட்டக் குழு அறிக்கை சமர்ப்பித்தார். மாநாட்டை துவக்கி வைத்து மண் டல பொதுச் செயலாளர் வி்.ரமேஷ் உரையாற்றினார். காப்பீட்டுக் கழக தஞ்சைக் கோட்டத் தலைவர் எஸ்.செல்வராஜ், பொதுக் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் ஏ.ராசேந்திரன், இராம.நாராயணன் மற்றும் முகவர்கள் சார்பாக பி.இளையராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அறிக்கையின் மீது விவாதம் நடத்தினர். ஊழியர்கள், ஓய்வூதியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் முகவர்கள் உட்பட 50 தோழர் கள் கலந்து கொண்டனர். தென் மண்டல இணைச் செயலாளர் எஸ்.பாலசுப்பிர மணியன் நிறைவுரையாற்றினார். புதி தாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் டி.பிரபு நன்றி கூறினார். 

அரசு பொது இன்சூரன்ஸ் நிறு வனங்களின் பங்கு விற்பனையை கைவிட வேண்டும். அரசு பொது இன்சூ ரன்ஸ் நிறுவங்களான யுனைடெட் இந்தியா, ஓரியண்டல், நேஷனல் மற்றும் நியூ இந்தியாவை எல்ஐசி போல் ஒன்றாக இணைத்து பலப்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும் உள் ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.  மேலும் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். எம்.ஜவ ஹர்லால் தலைவராகவும், டி.பிரபு செயலாளராகவும், பி.விஜயகுமார் பொருளாளராகவும், துணைத் தலை வர்களாக என்.செல்வம், ஜெ.ராம நாராயணன், இணைச் செயலா ளர்களாக என்கருணாநிதி, ஏ.பூர்ணிமா மற்றும் மாவட்டக்குழு உறுப்பி னர்களாக கே.டி.சேதுராமன், வி்.புவ னேஸ்வரி, டி.எம்.ஞானகுரு, கிளைச் செயலாளர்களாக ஏ.காளிமுத்து, எம். சரண்ராஜ், டி.அழகுராஜா, மகளிர் துணைக்குழு உறுப்பினராக எஸ்.திலக வதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.