tamilnadu

மாதிரவேளூரில் பழுதடைந்த மின்மாற்றியை மாற்றக் கோரிக்கை

சீர்காழி, மே 19-கொள்ளிடம் அருகே மாதிரவேளூரில் பழுதடைந்த மின்மாற்றியை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் மாதிரவேளுர் எருக்கன்வாய்க்கால் அருகே மின் மாற்றி உள்ளது. இங்கிருந்து மாதிரவேளூர் கீரங்குடி பகுதியில் உள்ளவிவசாய நிலங்களில் மின் மோட்டார் களுக்கு மின்சாரம் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாதிரவேளூர்மற்றும் கீரங்குடி பகுதியில் உள்ளதெருக்களுக்கும், குடியிருப்புகளுக் கும், இதே மின்மாற்றியிலிருந்தே மின்சாரம் பிரித்து வழங்கப்படுகிறது. இந்த மின்மாற்றி கடந்த ஒரு வருடகாலமாக பழுதாகியும், மின்மாற்றியில்வைக்கப்பட்டுள்ள இரும்பு பெட்டியிலிருந்து ஒரு வகையான திரவம் எப்போதும் கசிந்து கொண்டேயிருக்கிறது. தொடர்ந்து தீப்பொறி வெளியாகிக் கொண்டிருப்பதையடுத்து அடிக்கடிமின்தடையால் விவசாய நிலங்களில் உள்ள மின்மோட்டார்கள் நிறுத்தப்படுவதுடன் அனைத்து வீடுகளும் அடிக்கடிஇருளில் மூழ்கும் நிலை ஏற்படுகிறது. எனவே மின்மாற்றியை உடனடியாக நிரந்தரமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.