tamilnadu

img

10 வருடமாக பூட்டியே கிடக்கும் கழிவறை செயல்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

சீர்காழி, ஜன.31 நாகை மாவட்டம், கொள்ளிடம் கடை வீதி அருகே ஊராட்சிக்குச் சொந்தமான பெரியார் நாளங்காடி கட்டிடத்தையொட்டி ஊராட்சி சார்பில் கழிவறைக் கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. கொள்ளிடம் கடை வீதியின் முக்கிய இடத்தில் இருந்து வரும் இந்த கழிவறை கட்டிடம் பலருக்கும் பயன் பட்டது. ஆனால் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்தக் கழிவறைக் கட்டிடம் பூட்டியே கிடக்கிறது.  இதனால் பலர் அவதியுற்று வருகின்றனர். கொள்ளிடத்திற்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர்.  ஆனால் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் ஆண்கள் மற்றும் பெண்கள்  அவதிப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் அதிக வேதனைக்குள்ளாகின்றனர். எனவே 10 வருடமாக பூட்டியே கிடக்கும் கழிவறைக் கட்டிடத்தை புதுப்பித்து மீண்டும் திறந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

;