தஞ்சாவூர், ஜூலை 3- அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவரை விதிமுறைகளை மீறி பணியிடை நீக்கம் செய்ததைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் சார்பில் தஞ்சை பன கல் கட்டிடம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிர மணியன் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டிய நாளான மே31 அன்று, பழிவாங்கும் நடவ டிக்கையாக தமிழக அரசால் தற்கா லிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், கடந்த ஜூன் 3-ம் தேதி மாவட்டத் தலை நகரங்களில் ஆர்ப்பாட்டமும், ஜூன் 12, 13, 14 ஆகிய தேதிகளில் சென் னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது. இதே கோரிக்கையை வலி யுறுத்தி செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சை.கோவிந்த ராசு தலைமை வகித்தார். மாநி லச் செயலாளர் இரா.பன்னீர்செல் வம், மாவட்டச் செயலாளர் ஆர். ரெங்கசாமி, மாவட்டப் பொருளா ளர் சா.கோதண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட துணைத் தலைவர் ரமா ராமநாதன் தலைமை வகித் தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்க சாமி, முன்னாள் மாவட்டச் செயலா ளர் சி.கோவிந்தசாமி மற்றும் நிர் வாகிகள் குமரேசன், ராமச்சந்தி ரன், நடராஜன், அரங்கசாமி உள் ளிட்டோர் பேசினர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட துணைத் தலைவர் ரமா ராமநாதன் தலைமை வகித் தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்க சாமி, முன்னாள் மாவட்டச் செயலா ளர் சி.கோவிந்தசாமி மற்றும் நிர் வாகிகள் குமரேசன், ராமச்சந்தி ரன், நடராஜன், அரங்கசாமி உள் ளிட்டோர் பேசினர்.