திருச்சிராப்பள்ளி, ஜூலை 26- இந்திய ரயில்வேயை தனியாருக்கு கொடுக்கும் 100 நாள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு பொதுத் துறை நிறுவனங்களில் ரயில்வே சம் பந்தமான ரயில்கள் மற்றும் பெட்டிகள் உற்பத்தி செய்வதற்கு பதிலாக தனி யார் நிறுவனங்களிடமிருந்து ரெடிமேட் ரயில்களை வாங்கும் திட்டதை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் பொன் மலை கிளைகள் சார்பில் வெள்ளி யன்று பொன்மலை ஆர்மரிகேட் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட உதவி செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி ஒர்க் ஷாப் டிவிசன் கோட்ட தலைவர் மகேந்திரன், உதவி பொதுச்செயலாளர் மனோ கரன், ஆகியோர் பேசினர். டிவிசன் நிர்வாகி ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோட்ட உதவி தலைவர் கருப்பசாமி நன்றி கூறினார்.