tamilnadu

img

நாகப்பட்டினத்தில் அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஜூன் 27- தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறையில் ஊதியப் பட்டியல்கள் கால தாமதாவதற்கும் குளறுபடியாவ தற்கும் கருவூலத் துறை ஊழியர்கள் மீது பழி போடக் கூடாது என்று கண் டித்து அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாகை மாவட்டக் கருவூல அலுவலகம் முன்பு, செவ்வய்கிழமை மாலை கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழ கன் விளக்கவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ப.அந்து வன்சேரல் தலைமை வகித்தார். செய லாளர் ஏ.டி.அன்பழகன் விளக்கவுரை யாற்றினார். வருவாய்த்துறை அலு வலர் சங்க மாவட்டச் செயலாளர் து. இளவரசன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜோதிமணி, அரசு ஊழியர் சங்க குத்தாலம் வட்டச்  செயலாளர் எம்.இராமச் சந்திரன், கீழ்வேளூர் வட்டம் செயலா ளர்  என்.புகழேந்தி, நாகை வட்டச் செய லாளர் எம்.தமிழ்வாணன், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சொ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் எம்.நடராஜன் நிறைவுரை யாற்றினார். மாவட்டப் பொருளாளர் பா.இராணி நன்றி கூறினார்.