tamilnadu

img

மரக்கன்றுகளை வழங்கி பிறந்தநாள் கொண்டாடிய அரசுப் பள்ளி மாணவி

புதுக்கோட்டை, ஜூன் 18-  ஆலங்குடி அடுத்த சேந்தன்குடி அரசுப் பள்ளி மாணவி தனது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டதுடன் சக மாணவ, மாணவி களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்க.கண்ணன் மகள் பொற்செல்வி(9). அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வரு கிறார். இந்நிலையில் செவ்வாய் கிழமை தனது பிறந்த நாளை முன்னிட்டு புத்தாடை அணிந்து பள்ளிக்கு வந்த மாணவி பொற்செல்வி, தலைமை ஆசிரியை பூமொழி யுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டார். தொடர்ந்து பள்ளியில் படிக்கும் சக மாணவ, மாணவி கள் சுமார் 95 பேருக்கு மரக்கன்றுகளை பரிசாக வழங்கி னார்.