தஞ்சாவூர், நவ.18- பிளாஸ்டிக் பொருட்கள் மக்கும் தன்மை இல்லாமல் பூமியில் தேங்கி வருகிறது. இதனால் பூமிக்குள் நீர் செல் லாமல் தடுக்கப்பட்டு பூமியும் வறண்டு வருகிறது. இந்த பிளாஸ்டிக் பொருட்க ளை மனித குலம் பயன்படுத்த வேண்டாம் என சர்வதேச சுற்றுச்சூழல் ஆர்வலர் வேண்டுகோள் விடுத்து வரு கின்றனர். எனவே பிளாஸ்டிக் பொரு ளுக்கு மாற்றுப் பொருட்களை கண்ட றிய வேண்டிய காலக் கட்டத்தில் இருந்து வருகிறோம். இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருளை அரசுப் பள்ளி மாணவி கண்டுபிடித்து, தேசிய அளவிலான அறிவியல் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருபவர் எஸ்.அர்ச்சனா. இவர் பள்ளி அளவிலும், வட்டார அளவி லும், பின்னர் மாவட்ட அளவிலும் நடை பெற்ற அறிவியல் போட்டியில் பங்கேற்றார். கடந்த வாரம் கரூரில் மாநில அளவிலான அறிவியல் போட்டி யில் அர்ச்சனா பங்கேற்று முதலிடம் பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார். பாப்பாநாடு அரசுப் பள்ளி மாணவி அர்ச்சனா இயற்கையான பொருட்க ளை கொண்டு உயிரி நெகிழி என்ற பயோ பிளாஸ்டிக் பொருட்களை கண்டறிந் துள்ளார். அதாவது இயற்கையாக கிடைக்கும் சோளமாவு, கிளிசரின், ஆசிக்அமிலம், வினிகர் ஆகியவற்றை கொண்டு 28 நாளில் மக்கும் தன்மை கொண்ட மாற்றுப் பொருளை கண்ட றிந்து, அதனை பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் காட்சிப் படுத்தினார். இதில் அர்ச்சனாவின் படைப்பு தேர்வு செய்யப்பட்டு, வட்டார அளவிலும், பின்னர் கடந்த அக்.15 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்ட அள வில் நடைபெற்ற அறிவியல் கண் காட்சியிலும் முதலிடம் பெற்றது.
தேசியப் போட்டிக்கு தேர்வு
இதையடுத்து கடந்த அக்.31-ஆம் தேதி முதல் நவ.2 ஆம் தேதி வரை தமிழக அளவில் உள்ள 32 மாவட்டங்க ளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாநில அளவிலான அறி வியல் கண்காட்சியில் 147 படைப்புகள் இடம் பெற்றதில் முதல் படைப்பாக அர்ச்சனாவின் “உயிரிநெகிழி” முதலிடம் பிடித்துள்ளது. இது குறித்து மாணவி அர்ச்சனா வின் வழிகாட்டி ஆசிரியை டி.ஜென் சிரூபா கூறியதாவது: பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்திய போது, அர்ச்சனாவின் அறிவியல் படைப்பு இடம் பெற்றது. பிளாஸ்டிக் பொருட்க ளுக்கு மாற்றாக இந்த பொருள் இடம் பெற்றதால், தற்போது மாநில அளவில் எங்களது பள்ளி மாணவி முதலி டத்தில் தேர்வாகியுள்ளார். இதைய டுத்து மாணவியை பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் கள், மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தோம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக ஒரு பொருள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக தான், உயிரி நெகிழி என்ற இந்த பொருள் கண்டறி யப்பட்டது. மாணவி அர்ச்சனாவின் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் அவர் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார்” என்றார். இது குறித்து மாணவி அர்ச்சனா கூறியதாவது: பள்ளியில் ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக தான் நான் அறிவியல் கண்காட்சி போட்டி யில் கலந்து கொண்டேன். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக உயிரி நெகிழி யினை எனது கண்டுபிடிப்பாக காட்சிப் படுத்தினேன். இதில் நான் தமிழக அளவில் முதலி டம் பெற்றுள்ளேன். இந்த திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும், அதற்கான செலவுத் தொகை குறைவு தான். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இந்த உயிரி நெகிழியை கொண்டு பைகள், தட்டுகள், கப்புகள் தயாரிக்கலாம். பொது மக்களும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு களை தவிர்க்க வேண்டும்” என்றார்.