கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் போதாவூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கான கையுறை மற்றும் முகக்கவசங்களை போதாவூர் கிராமவளர்ச்சி குழுசார்பில் சுப்ரமணி, விக்னேஷ்வரன், மாரிமுத்து ஆகியோர் ஊராட்சி செயலர் முத்துக்குமார், கிராமநிர்வாக அதிகாரி மோகன்தாஸ் ஆகியோரிடம் வழங்கினர்.