அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் மனமேல்குடி வட்டார வள மையத்தில் நடைபெற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உதவி உபகரணம் வழங்கும் நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் (பொ) அருள் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையா ளர் (பொ) தனலெட்சுமி முன்னிலை வகித்தார். 12 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இருசக்கர நாற்காலி, காதொலி கருவி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. உபகரணங்களை பயன்படுத்தும் முறை பற்றி இயன்முறை மருத்துவர் செல்வக்குமார் ஆலோசனை வழங்கினார். கல்வி ஒருங்கிணைப்பா ளர் உமாமகேஸ்வரி, சிறப்பு ஆசிரியர்கள் கோவேந்தன், மணிமேகலை, கலைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.