tamilnadu

img

கொரோனா பேரிடர் காலம் முழுவதும் ரேசன் பொருட்களை இலவசமாக வழங்குக!

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஆக.14- கொரோனா கால கட்டத்தில் ரேசன் பொ ருட்களை இலவசமாக தருவதாக கூறிவிட்டு  ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து பொருட்களு க்கும் காசு கேட்கும் அதிமுக அரசை கண்டி த்தும், கொரோனா பேரிடர் காலம் முழுவ தும் ரேசன் பொருட்களை இலவசமாக வழங்க  கோரியும் அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் ஒன்றியம் திருமலைசமுத்தி ரத்தில் ராமராஜ் தலைமை வகித்தார். விதொச மாவட்டப் பொருளாளர் கே.அபிமன்னன் கோ ரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாப்பிள்ளை நாயக்கன் பட்டியில் பஞ்ச வர்ணம், மருதகுடியில் ரவிச்சந்திரன், ஆல க்குடியில் கலியபெருமாள், கல்விராயன்பே ட்டையில் ஏ.புகழேந்தி, நீலகிரியில் முத்து சாமி, மாத்தூரில் அமுல்ராஜ், நாகத்தியில் பழ.தமிழ்செல்வி, ஆற்காட்டில் ஜான் பீட்டர் தலைமையில் நடைபெற்றது.

அம்மாபேட்டை 

அம்மாபேட்டை ஒன்றியம் இராராமுத்தி ரைக் கோட்டையில் மாவட்டக்குழு உறுப்பி னர் ஆர்.கலைச்செல்வி தலைமையிலும், அம்மாபேட்டையில் வி.ரவி, புளியக்குடியில் ராஜேந்திரன், உக்கடையில் கோபால், ஸ்டீபன், கோவிலூர் - நெல்லித்தோப்பு கடைவீதியில் நாகலிங்கம்  ஆகியோர் தலை மை வகித்தனர். 

பூதலூர் 

பூதலூர் வடக்கு ஒன்றியம் முல்லைக்குடி யில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.காந்தி,  பாதிரக்குடியில் எம்.சம்சுதீன், ஒரத்தூரில் சி.கரிகாலன், திருச்சென்னம்பூண்டியில் இ.பன்னீர்செல்வம், தோகூரில் எம்.பாஸ்க ரன், பழமார்நேரியில் ஏ.செபஸ்தியார், விஷ்ணம்பேட்டையில் சி.சிவசாமி, கட மங்குடியில் ஆர்.உதயகுமார், மாரனேரியில் எஸ்.மெய்யழகன் தலைமையில் நடை பெற்றது. பூதலூர் தெற்கு ஒன்றியம் பூதலூர்,  கோட்டரப்பட்டி, செங்கிப்பட்டி, ராயமுண்டா ன்பட்டி, துருசுப்பட்டி, வெண்டையம்பட்டி, காமாட்சிபுரம் ஆகிய இடங்களில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. 

திருவையாறு 

திருவையாறு ஒன்றியத்தில் செந்தலை,  வளப்பக்குடி, பூதராயநல்லூர், திருவை யாறு, அம்மையகரம், வரகூர் உள்ளிட்ட இடங்களில் ரேசன் கடைகள் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவையாறு, வரகூரில் விதொச மாநிலச் செயலாளர் எம். சின்னத்துரை கோரிக்கை விளக்கவுரை யாற்றினார். 

சேதுபாவாசத்திரம் 

சேதுபாவாசத்திரத்தில் ஒன்றியம் மேலமணக்காடு, நெல்லியடிக்காடு, சுப்ப ம்மாள் சத்திரம், மரக்காவலசை, மருங்கப்ப ள்ளம், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, கீழ  மணக்காடு, குருவிக்கரம்பை, பெருமகளூர்,  ஊமத்தநாடு, கொரட்டூர் ஆகிய இடங்க ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பேராவூரணி 

பேராவூரணி ஒன்றியம் பூவாளூர், வாட்டாத்திக்கொல்லைக்காடு, திருச்சிற்ற ம்பலம், செருவாவிடுதி, ஆவணம், அம்மை யாண்டி, சித்துக்காடு உள்ளிட்ட இடங்களில்  கட்சி ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமா ரசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விவசாயத் தொழிலாளர்கள் சங்க  மாவட்டத் தலைவர் ஆர்.வாசு கண்டன உரை யாற்றினார். பட்டுக்கோட்டை ஒன்றியம் தாம ரங்கோட்டையில் பாப்பா என்ற சுப்பையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவிடைமருதூரில் விதொச மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, லிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.அருளரசன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பழனிவேல், விதொச ஒன்றியச் செயலாளர் ரெங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

கும்பகோணம் 

கும்பகோணத்தில் விதொச மாநி லக்குழு உறுப்பினர் சி.நாகராஜ் கலந்து கொண்டார். பாபநாசத்தில் மாநிலக்குழு உறு ப்பினர் ஏ.மாலதி, வி.உமாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.  திருவிடைமருதூர் 11,  பேராவூரணி 8, சேதுபாவாசத்திரம் 10, பூத லூர் வடக்கு 10, பூதலூர் தெற்கு 7, பாபநா சம் 1, திருப்பனந்தாள் 1, திருவையாறு 5, அம்மாபேட்டை 9, கும்பகோணம் 20, தஞ்சா வூர் 8 ஆகிய 90 மையங்களில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டங்களில் 2,810 பேர் கலந்து கொண்டனர். 

திருப்பனந்தாள்

திருப்பனந்தாள் ஒன்றியம் கண்ணா ரக்குடி கிராமத்தில் விதொச ஒன்றிய செயலா ளர்  தினேஷ்குமார் தலைமை வகித்தார்.  சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை பாண்டியன், மாவட்ட குழு உறுப்பி னர் கோ.அரவிந்தசாமி, திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் சாமிக்கண்ணு உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர்.

குடவாசல்

வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி கடைத்தெருவில் விவசாயிகள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற போரா ட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க த்தின் ஒன்றிய செயலாளர் கே.சுப்ரம ணியன் தலைமை வகித்தார்.