tamilnadu

img

மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 2- கல்வி, சுகாதாரம், நூறு நாள் வேலைத் திட்டம், பெண்கள், குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு நிதி குறைப்பு உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களை அறிவிக்காத மக்கள் விரோத மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து சிஐடியு, தொமுச, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எம்எம்எஸ் மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் திங்களன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் ராமர், பொருளாளர் வி.கே.ராஜேந்திரன், ஜெயபால், தொமுச எத்திராஜ், ஏஐடியுசி மாநகர் மாவட்ட செயலாளர் சுரேஷ், ஐஎன்டியுசி துரைராஜ், எம்எம்எஸ் ராஜமாணிக்கம் ஆகியோர் பேசினர். சிஐடியு, தொமுச, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எம்எம்எஸ் மத்திய தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

;