tamilnadu

img

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திருச்சிராப்பள்ளி, ஜன.29- திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் காந்தி நகர்- செல்வபுரம் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் குடியரசு தின விழாவையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் பொதுமக்களும் இணைந்து 9 ஆண்டு விளை யாட்டு விழா  சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாள் நடை பெற்றது. முதல் நாள் விழாவில் சிறுவர்- சிறுமிகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.  இரண்டாம் நாளில் குடியரசு தினத்தன்று தேசிய கொடியை சிபிஎம் மூத்த தோழர் ஆனந்தன் ஏற்றினார். பின்னர் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிப்போம் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் கோலப் போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. மாலையில் பேச்சுப் போட்டி, பாட்டுப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. போட்டிகளை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தொடங்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு வாலிபர் சங்க மாவட்ட செயலா ளர் லெனின் பரிசுகளை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், சர்வீஸ் ரோடு மீட்புக்குழு தலைவர் நைனா மலை, செல்வபுரம் நல சங்கம் தலைவர் கருணாநிதி, அம்பேத் கர் நகர் தலைவர் வழக்கறிஞர் விஜயலட்சுமி, சோழமாதேவி ஊராட்சி தலைவர் முருகானந்தம், துணைத் தலைவர் சலீம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;