tamilnadu

தனியார் வேலைவாய்ப்பு முகாம்  

திருச்சிராப்பள்ளி, மார்ச் 7- திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 15-ந் தேதி ஜமால் முகமது கல்லூரியில் ஆட்சியர் தலைமையில் காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது. முகாமில் 100-க்கும் மேற்பட்ட  முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான 8600 வேலை நாடு நர்களை தேர்வு செய்யவுள்ளனர். முகாமில் 8, 10-ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பாரா மெடிக்கல், ஹோட்டல் மேனேஜ் மென்ட், பிஎட், பிஇ பட்டதாரிகள் தங்களது முழு சுய விவரக்குறிப்பு நகல்கள் அனைத்து கல்விச்சான்று கள், ஆதார் அட்டை மற்றும் புகைப் படம் ஆகியவற்றுடன் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.