tamilnadu

img

குழந்தைகளுக்கான காவல் பிரிவு.... இந்தியாவிலேயே முதன்முறையாக திருச்சியில் திறப்பு...

திருச்சி:
இந்தியாவிலேயே முதன்முறையாக  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலைய வளாகத்தில் குழந்தைகளுக்கான பிரத்யேக காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகளுக்கு எதிரான வன் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைபாதுகாப்பு ஆணையம் மற்றும் திருச்சிமாவட்ட காவல்துறை சார்பில் சட்டம் -ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் இந்தியாவிலேயே முதன் முறையாக, குழந்தைகளுக்கான பிரத்யேக காவல் நிலையம் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல்நிலைய வளாகத்தில் திறந்து வைக்கப் பட்டது.திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா முன்னிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் குழந்தைகளுக்கான பிரத்யேக காவல் நிலையத்தைதிறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்துபல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டு கல்வி பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையையும் வழங்கினார்.

பின்னர் ஆர்.ஜி.ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், குழந்தைகளுக் கான மன நிலையை கண்டறிவது, அவர் களுக்கான கவுன்சிலிங் அளிப்பது என்பது சவாலானது. சர்வதேச நீதி மையம் கூட இதுதொடர்பான காவல் நிலையத்தை அமைப்பது என்பது முடியாத நிலையில் இந்தியாவிலேயே முதன் முறையாக திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும்  11 இடங்களில் விரைவில் தொடங் கப்பட உள்ளது.கொரோனா காலத்தில் குழந்தைகள் திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை களைய சம்யோஜனா என்ற டோல் ப்ரீ எண்அனைத்து மொழிகளிலும் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. 1800 121 1283 என்ற எண்ணை தொடர்பு கொண்டு குற்றச் சம்பவம்தொடர்பாக வீட்டிலிருந்து பாதிக்கப்பட்ட பெண் உட்பட யாரேனும் அழைக்கலாம்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவம் தொடர்பாக தமிழகத்திலிருந்து அதிகமான அழைப்புகள் வரப்பெறுகிறது. மனநலஆலோசகர் மூலம் பயிற்சிகளும் வழங்கப் படுகிறது. கொரோனா காலத்தில் பெண்கள்மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறைவதற்கு காரணமான காவல் துறையை பாராட்டுகிறேன். கொரோனா காலம் மட்டுமல்லாது குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் ஏழாவது இடத்தில் உள்ளது என்று தெரிவித்தார்.