புதுக்கோட்டை, ஜுலை 3- புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் உரிய நேரத்துக்கு ரயில் வராததைக் கண்டித்து பயணிகள் புதன்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்குடியிலிருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில் புதுக்கோட்டை ரயில்வே நிலையத்துக்கு காலை 7.40 மணிக்கு வரு வது வழக்கம். ஆனால், கடந்த சில நாட்களாக உரிய நேரத்துக்கு முன்ன தாகவே வந்து சென்றுள்ளது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதையடுத்து புதன்கிழமை புதுக்கோட்டை ரயில் நிலை யத்தில் காத்திருந்த பயணிகள், திருச்சி-காரைக்குடி பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோகர்ணம் போலீசார், சமாதானம் செய்து போராட்டத்தைக் கைவிடச் செய்தனர். இதனால் சிறிது நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டது.