tamilnadu

img

நெசவுத் தொழிலை மேம்படுத்துவேன் பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர் வாக்குறுதி

திருச்சிராப்பள்ளி, ஏப்.14-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிஇந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் வெள்ளியன்று திருச்சி முசிறி சட்டமன்ற தொகுதி தொட்டியம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணமேடு, அரங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர்பாரிவேந்தர் பேசியதாவது, நெசவாளர்களின் நெசவுத் தொழிலை மேம்படுத்தி அவர்களது வாழ்வை மேம்படுத்துவேன். நலத்திட்ட பணிகள், உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தருவேன். முள்ளிப்பாடி ஏரியை சீரமைப்பேன் என வாக்குறுதி அளித்துவாக்கு சேகரித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெண்மணி கலைக்குழுவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

;