tamilnadu

img

பணிநீக்கம் செய்வதை கைவிடுக! செக்யூரிட்டி சங்கத்தினர் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, செப்.2- பல ஆண்டுகளாக ஐஐஎம்-ல் பணி புரியும் கான்ட்ராக்ட் செக்யூரிட்டிகளை பணி நீக்கம் செய்வதை கைவிட்டு தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வலியுறுத்தி இந்திய மேலாண்மை கழக கான்ட்ராக்ட் செக்யூ ரிட்டிகள் சங்கம் (சிஐடியு) சார்பில் திங்க ளன்று சின்னசூரியூரில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது.  போராட்டத்திற்கு ஸ்டாலின் தலைமை வகித்தார். சிஐடியு புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ். மாவட்ட துணை செயலாளர் பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வெறும்பூர் ஒன்றிய செயலாளர் நட ராஜன், தெய்வநீதி, சங்கர் ஆகியோர் துவக்கி வைத்து பேசினர். மருதாசலம், பவுல்ராஜ், ராஜா, ரூபா, பால கிருஷ்ணன் மற்றும் 15 பெண்கள் உள் பட 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.