tamilnadu

img

நூறு நாள் வேலையில் சம்பளம் ரூ.400 வழங்குக!

திருச்சிராப்பள்ளி, ஜூன் 26- நூறு நாள் வேலைக்கு வரும் அனை வருக்கும் தொடர்ச்சியாக வேலை வழங்கி சட்டக்கூலி ரூ. 229 வழங்க வேண்டும். நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி ரூ.400 வழங்க வேண்டும். சம்பளத்தை வங்கி கட னுக்கு பிடித்தம் செய்ய கூடாது. அடை யாள அட்டை வழங்க லஞ்சம் கேட்கும் பணிதள பொறுப்பாளர் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் செவ்வா யன்று திருச்சி மாவட்டம் துறையூர் யூனி யன் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விதொச ஒன்றி யத் தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். போராட்டத்தை விதொச மாவட்டத் தலைவர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ்.இந்துராஜ், மாதர் சங்க புறநகர் மாவட்டத் தலைவர் லிங்கராணி, விச ஒன்றியத் தலைவர் காசிராஜன், விச ஒன்றிய செயலாளர் குமார், நடராஜன் ஆகியோர் பேசினர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் 800 மனுக்கள் வழங்கி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்யும் அனை வருக்கும் உரிய காலத்தில் சம்பளம் வழங்கப்படும். புதிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப் படும். பணிதள பொறுப்பாளரை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படும் என்பன உள்பட பல்வேறு முடிவு கள் எடுக்கப்பட்டன. இதனையடுத்து காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

திருவெறும்பூர்

திருவெறும்பூரில் நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாய தொழிலா ளர் சங்க ஒன்றியத் தலைவர் தெய்வ நிதி தலைமை வகித்தார். போராட் டத்தை அகில இந்திய விவசாயிகள் சங்க மத்தியக் குழு உறுப்பினர் சந்தி ரன் தொடங்கி வைத்தார்.  திரு வெறும்பூர் கடை வீதியில் இருந்து திருவெறும்பூர் ஒன்றிய அலுவல கத்திற்கு ஊர்வலமாக சென்ற 200-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலா ளர்கள் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியப்பனிடம் மனு கொடுத்தனர்.