திருச்சிராப்பள்ளி, மே 9- பொதுத்துறை நிறுவன மான பிஎஸ்என்எல்லில் அவுட்சோர்சிங்கை அம லாக்க கூடாது. நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி திருச்சி பிஎஸ்என் எல்இயு, தமிழ்நாடு தொ லைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி ஒத்தகடை பகுதி யில் உள்ள பிஎஸ்என்எல் மண்டல பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் வெள்ளியன்று சமூக இடை வெளியுடன் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பிஎஸ் என்எல்இயு மாவட்ட தலைவர் தேவராஜ், தமிழ் நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. போராட் டத்தை விளக்கி பிஎஸ்என் எல்இயு மாவட்ட செயலாளர் அஸ்லம்பாஷா, தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக்அலி, உதவிசெயலாளர் குமார், ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.