tamilnadu

img

டாஸ்மாக் திறப்பதற்கு எதிர்ப்பு

திருச்சிராப்பள்ளி, மே 8-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுக் கடைகளை திறக்கும் தமிழக அரசை கண்டித்து கட்சி யின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தனது வீட்டில் தனது குடும்பத்தினருடன் தனிநபர் இடைவெளியுடன் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதே போன்று மாவட்ட கட்சி அலுவலகமான வெண்மணி இல்லம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் சிவராஜ், ரெங்கராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் ரெங்கநாதன், ஆட்டோ சங்க நிர்வாகிகள் மணிகண் டன், சந்திரன், தீக்கதிர் திருச்சி பதிப்பு பொதுமேலாளர் பன்னீர்செல்வம், விளம்பர மேலாளர் ஸ்டாலின் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் ஒன்றிய அலுவலகங்கள், வீடு களின் முன்பும் கட்சியினர், மாதர் சங்கத்தினர் மற்றும் தோழமை சங்கத்தினர் மதுக்கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

வலங்கைமான்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ராமப்பா தோட்டத்தில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.இராதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு எம்.சேகர், மாவட்டகுழு கே.சுப்ர மணியன், ஒன்றியகுழு உறுப்பினர்கள் என்.பாலைய் யா, ஆர்.ஜெ.நடராஜன், சி.கருப்பையன், டி.சண்முகம், ஜெ.ஜெயராஜ், எஸ்.சாமிநாதன், ஏ.சுப்ரமணியன் கலந்து கொண்டனர்.  வலங்கை பூந்தோட்டம் கிளை ச.கவாஸ்கர் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் இ.மைதிலி, மாவட்ட பொருளா ளர் எஸ்.இளங்கோவன், வாலிபர் சங்கம் சார்பாக கொக்கலாடி கிளையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரடாச்சேரி ஒன்றியத்தில் நடைபெற்ற போராட் டத்திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே.சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.தம்புசாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.கோபிராஜ், டி.ஜெய பால், ஆர்.மருதையன், பி.பரமசிவம் கலந்து கொண்டனர்.

நன்னிலம்

நன்னிலம் ஒன்றியம் கொல்லுமாங்குடியில் கட்சி யின் மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமது உதுமான் தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தார். வாலிபர் சங்கம் சார்பாக நன்னிலம் ஒன்றியத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் வசந்த பாலன் மற்றும் சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் வரத.வசந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஒன்றியம் மூத்தாக் குறிச்சி, அத்திவெட்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, மாவட்டக்குழு உறுப்பினர் காசிநாதன், கலாவதி (மாதர் சங்கம்) கலந்து கொண்டனர். 

கரூர்

கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் மாவட்டக் குழு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். ஜோதிபாசு, சி.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் கள் எம்.தண்டபாணி, ஆர்.ஹோச்சுமின், எஸ்.பி.ஜீவா னந்தம், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ராஜா, கட்சி கிளை கணேசன் சக்திவேல் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள், கட்சி அலுவலகங்கள், வீடுகள் என ஆயிரக்கணக்கான இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் திமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் எஸ்.ரகுபதி, பொரியண்ணன் அரசு, கே.கே.செல்லபாண்டியன்,  சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத் துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் தர்ம.தங்கவேல், முருகேசன், மதிமுக மாவட்டச் செயலாளர் டாக்டர் க.சந்திரசேகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா ளர்கள் விடுதலைக்கனல், கலைவேந்தன் உள்பட ஏராள மானோர் பங்கேற்றனர்.

பெரம்பலூர்

கட்சியின் பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள கட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை தலைமை வகித்தார். வட்ட செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம் முன்னிலை வகித்தார். வி.தொ.ச மாவட்ட செயலாளரும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமாகிய பி.ரமேஷ் கண்டன உரையாற்றினார். பி.கிருஷ்ணசாமி, எம்.கரு ணாநிதி ஆர்.முருகேசன், சீனிவாசன் கலந்து கொண்டனர். திமுக சார்பில் மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் வடக்குமாதவி சாலையிலுள்ள அவரது இல்லத்திலும், மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் எஸ்.அகஸ்டின், மாதர் சங்கம் சார்பில் எ.கலையரசி வீடுகள் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து கோஷமிட்டனர். சிபிஎம் பெருமத்தூரில் ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.