tamilnadu

img

புதிய நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

தஞ்சாவூர் ஜூலை.6- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி நீலகண்டபுரம் சின்னத்தம்பி தெருவில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தலைமை வகித்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் மு.பொன்னுசாமி, தலைமை எழுத்தர் வீ.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக ஒன்றியச் செயலாளர்களும், கூட்டுறவு வங்கி தலைவர்களுமான உ.துரைமாணிக்கம்(பேராவூரணி), நாடியம் சிவ.மதிவாணன் (சேதுபாவாசத்திரம்), முன்னாள் மாநில கயிறு வாரியத் தலைவர் எஸ்.நீலகண்டன், நகரச் செயலாளர் வி.என்.பக்கிரிசாமி, வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், முன்னாள் அவைத் தலைவர் எம்.சுந்தர்ராஜன், பால் ஏ.பக்கர், கோ.ப.ரவி, எம்.எஸ்.நீலகண்டன், வன்மீகிநாதன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் டாக்டர் மு.சீனிவாசன், கணேசன் சங்கரன், நடராஜன் சங்கரன், குப்பமுத்து சங்கரன் கலந்து கொண்டனர்.