tamilnadu

img

சிபிஎம் போராட்டத்தால் நூறு நாள் திட்ட நிபந்தனை வாபஸ்

மன்னார்குடி,ஜூலை 10- முத்துப்பேட்டை ஒன்றி யம் குன்னலூர் ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டத் தில் ஒரு குடும்பத்திற்கு ஒரு நபர் என்ற நிபந்தனை விதிக் கப்பட்டது. இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துப்பேட்டை ஒன்றியக் குழுவின் சார்பாக குன்னலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட் டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலா ளர் ஆர் வீரமணி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கே.பாலசுப்பிரமணியன், சிஐடியு கட்டுமான தொழிலா ளர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் பி. நடராஜன் மற்றும் 100 நாள் திட்ட தொழிலா ளர்கள் பங்கேற்றனர். முத்துப்பேட்டை  ஊரக வளர்ச்சித் துறை அலுவ லர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தை முடிவில் நிபந்த னையை விலக்கிக் கொள்வ தாகவும் ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கும் வேலை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. அதன் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.