tamilnadu

img

ஆம்னி பஸ் தரகர்கள், அரசு பஸ் நடத்துநர்களின் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுத்திடுக!

திருச்சிராப்பள்ளி, மே 15-தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தின் திருச்சி மாவட்ட 35-வது ஆண்டு பேரவை கூட்டம் செவ்வாய்க்கிழமை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாசா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் சம்பத் தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை துணை பொதுச் செயலாளர் முருகேசன் வாசித்தார். சிஐடியு திருச்சி மாவட்டத் தலைவர் ரெங்கராஜன் துவக்கவுரையாற்றினார். வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் சீனிவாசன் வாசித்தார். வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் சுப்ரமணியன் சமர்ப்பித்தார். சம்மேளன பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார் வாழ்த்துரை வழங்கினார். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஆம்னி பஸ் இடைத்தரகர்களுக்கும் அரசு பேருந்து நடத்துநர்களும் இடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் கல்விக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக ஆர்.சம்பத், பொதுச் செயலாளராக எம்.கருணாநிதி, பொருளாளராக டி.சுப்ரமணியன், சட்ட ஆலோசகராக ஜெ.எம்.மாணிக்கம் மற்றும் 4 துணை பொதுச் செயலாளர்கள், 8 துணைத் தலைவர்கள், 8 துணைச் செயலாளர்கள் உள்பட 24 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.முன்னதாக துணைத் தலைவர் கருணாநிதி வரவேற்றார். முடிவில் துணைத் தலைவர் சிங்கராயர் நன்றி கூறினார்.திருச்சிராப்பள்ளி, மே 15-தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தின் திருச்சி மாவட்ட 35-வது ஆண்டு பேரவை கூட்டம் செவ்வாய்க்கிழமை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாசா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் சம்பத் தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை துணை பொதுச் செயலாளர் முருகேசன் வாசித்தார். சிஐடியு திருச்சி மாவட்டத் தலைவர் ரெங்கராஜன் துவக்கவுரையாற்றினார். வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் சீனிவாசன் வாசித்தார். வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் சுப்ரமணியன் சமர்ப்பித்தார். சம்மேளன பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார் வாழ்த்துரை வழங்கினார். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஆம்னி பஸ் இடைத்தரகர்களுக்கும் அரசு பேருந்து நடத்துநர்களும் இடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் கல்விக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக ஆர்.சம்பத், பொதுச் செயலாளராக எம்.கருணாநிதி, பொருளாளராக டி.சுப்ரமணியன், சட்ட ஆலோசகராக ஜெ.எம்.மாணிக்கம் மற்றும் 4 துணை பொதுச் செயலாளர்கள், 8 துணைத் தலைவர்கள், 8 துணைச் செயலாளர்கள் உள்பட 24 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.முன்னதாக துணைத் தலைவர் கருணாநிதி வரவேற்றார். முடிவில் துணைத் தலைவர் சிங்கராயர் நன்றி கூறினார்.