tamilnadu

img

திருச்சி மாவட்டத்தில் 116 ஊராட்சிகளில் வி.தொ.ச. சார்பில் மனுக் கொடுக்கும் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 12- ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.7500 நிவாரணம் வழங்க வேண்டும். 100 நாள் வேலைக்கு வரும் அனைவருக்கும் நிபந்தனையின்றி வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய் அன்று திருச்சி புறநகர் மாவட்டத்தில் 116 ஊராட்சிகளில் மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.  திருச்சி புறநகர் மாவட்டத்தில் லால்குடி பண்புஅறம்சுத்தி ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு விதொச மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். வி.ச ஒன்றிய தலைவர் பாலு, பானுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். லால்குடி ஒன்றியம் மாடக்குடி ஊராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.

 லால்குடி ஒன்றியம் திருமணமேட்டில் கே.பாலா, எம்.ராஜ்மோகன்,  தாளக்குடியில் பிரகலாதன், மேலவாளாடியில் மணி, தண்டாங்கோரையில் ராபர்ட், நெருஞ்சலக்குடியில் சீத்தாராமன், மருதூரில் ஜெகதீசன், குமார், திண்ணியத்தில் சுரேஷ், கூகூரில் கணேசன், வழுதியூரில் அலெக்சாண்டர் ஆகியோர் தலைமையில் ஊராட்சி அலுவலகங்களில் மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. புள்ளம்பாடி ஒன்றியம்   பெருவளப்பூரில் ரஜினிகாந்த், வ.கூடலூரில் அடைக்கலராஜ், கல்லகத்தில் சண்முகம், ஆலம்பாக்கத்தில் செல்லதுரை, தாப்பாயில் குமார், நம்புகுறிச்சியில், தியாகராஜன், கண்ணாக்குடியில், துரைசாமி, நஞ்சை சங்கேந்தியில் சந்திரன், குமுரில் அந்தோனிசாமி, கோவாண்டாக்குறிச்சியில்  வேளாங்கண்ணி ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.  மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியம் கரியமாணிக்கத்தில் முருகேசன், செல்வராஜ் திருப்பஞ்சீலியில் நல்லய்யன்,  பெரியசாமி, மாதவபெருமாள் கோவிலில் கருணாநிதி, மேல்பத்துவில் முருகேசன், ராணி, கிளியநல்லூரில் செல்வம், செல்வராஜ், திருவெள்ளரையில் முருகேசன், ரங்கநாதன், பூனம்பாளையத்தில் எம்.ஜி.ரவிச்சந்திரன், செல்லப்பெருமாள், நல்லதம்பி, தீரம்பாளையத்தில் மனோகரன், முத்தையன், சிறுப்பத்தூரில் (வீராணி) சின்னதுரை ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

 மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியம் பிச்சாண்டார் கோயிலில்  சுப்பிரமணியன், செல்லம்மாள், கலையரசி, தேவன், சக்திவேல், கூத்தூரில் கனகராஜ், கண்ணகி, கோவிந்தராஜ், வெங்கங்குடியில் பால்ராஜ், சேகர், அண்ணாதுரை, தேவிமங்கலத்தில் ஈஸ்வரன், ஜெயராணி, வளர்மதி, சிறுகனூரில் சந்திரசேகர், வீரமணி, பெரியசாமி இருங்கரில் சசிகுமார், சனமங்கலத்தில் பிரபு, மணிகண்டன், ராஜா ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.  துறையூர் ஒன்றியம் வரதராஜபுரத்தில் ஆனந்தன், சுசீலா, சந்திரன், க.பாளையத்தில் குமார், நடராஜன், செல்லிபாளையத்தில் ஜெயராமன், கிருஷ்ணன், கண்ணனூரில் சடையன், காசிராஜன், கீரம்பூரில் நல்லேந்திரன், தேவிகா ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

 உப்பிலியபுரம் ஒன்றியம் தளுகையில் முத்துக்குமார், கோவிந்தராஜ், ஜாபர் அலி, நாகநல்லூரில், பிச்சைமுத்து, தங்கவேலு கொப்பம்பட்டியில் சாக்ரடீஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. வைரிசெட்டிப்பாளையத்தில் மங்கள்ராஜ், ராமச்சந்திரன், ஒக்கரையில் விசுவநாதன், ரமேஷ், சிறுநாவலூரில் செல்வராஜ், ஜோதி, இ.பாதர்பேட்டையில் வடமலை, வீரமலை, கணேசன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.  மருங்காபுரி ஒன்றியம் மருங்காபுரி ஒன்றியம் மருங்காபுரியில் முருகேசன், அண்ணாதுரை, பழனியம்மாள், இடையப்பட்டியில் பழனிச்சாமி, வடிவேலு, பாலக்குறிச்சியில் அழகர்சாமி, லூக்காஸ், அயன் பொருவாயில் நாகராஜ், தர்மலிங்கம் கொடும்பபட்டியில் தியாகராஜன், மாணிக்கம் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.  தாத்தையங்கார் பேட்டை ஒன்றியம் துளையாநத்தத்தில் வீரவிஜயன், சந்திரமோகன், தும்பலத்தில் தங்கவேல், பாப்பாபட்டியில் முருகேசன், மகாதேவியில் சுப்ரமணியன், ஊரக்கரையில் ரெங்கராஜ் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.  

திருவெறும்பூர் ஒன்றியம்  திருவெறும்பூர் ஒன்றியம் வேங்கூரில் தெய்வநிதி, தேவி, பத்தாளப்பேட்டையில் முருகேசன், வாழவந்தான்கோட்டையில்  மகாலிங்கம், அசூரில் மலையாளம், காந்தலூரில் ராமமூர்த்தி, குண்டூரில் பழனிச்சாமி, நவல்பட்டில் பாலுசாமி, கும்பக்குடியில் முத்துக்குமரன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.  தொட்டியம் ஒன்றியம் களத்தூரில் ராணிஸ்ரீ, சுசிலா ஏழூர்பட்டி முருகன், வேலாயுதம், முருங்கையில் கோவிந்தசாமி, குட்டி கந்தசாமி கிடாரமத்தில் கிருஷ்ணன், சிப்லா புத்தூரில்  மனோகரன், அய்யலூரில் சங்கர், ராஜா, கொளக்குடியில் ஜெகநாதன், பாலசமுத்திரத்தில் முருகானந்தம், சுக்காம்பட்டியில்  ராமநாதன், அண்ணராசு, சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.  வையம்பட்டி ஒன்றியம் பெரியப்பட்டியில் ராஜ், பழைய கோட்டையில் வீராசாமி, கருங்குளத்தில் ஜெய்சீலி, நடுப்பட்டியில் வெள்ளைச்சாமி, முனியப்பன், அயன்ரெட்டியப்பட்டி பொட்டு, புதுக்கோட்டையில் முருகன், முகவனூரில் வின்சென்ட் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.  

முசிறி முசிறி ஒன்றியம் புலிவலத்தில் வீராசாமி, காஜாமொய்தீன், ரமேஷ், பெரமங்கலம், ரெங்கநாதன், வேங்கை மண்டலத்தில் செல்வராஜ், மூவானூரில் பிரபு, குமார், வீரமணிபட்டியில் தங்கராஜ், ஜீவா, தண்டலைப்புத்தூரில் ராஜா, முருகானந்தம், நெய்வேலியில் சத்யராஜ், சுக்காம்பட்டியில் பாபு, பேரூரில் நல்லசாமி, எம்.புதுப்பட்டியில் நல்லுசாமி, கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.  மணப்பாறை ஒன்றியம் பொய்யபட்டியில் கண்ணன், அந்தோணிசாமி, சூளியாபட்டியில் குருசாமி, சமுத்திரத்தில் மாசிலாமணி, பண்ணப்பட்டியில் வெள்ளைச்சாமி, கருப்பூரில் கோபாலகிருஷ்ணன், வேலுசாமி, மலையடிப்பட்டியில் ஷாஜகான், பத்மினி, வேங்கை குறிஞ்சியில் கருப்பையா, சீகம்பட்டியில் சுரேஷ், உசிலம்பட்டியில் சரஸ்வதி, ராஜாமணி, முத்துச்சாமி மொண்டியப்பட்டியில் பாலு, பெருமாள், தொப்பம்பட்டியில் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.   பொன்னமராவதி  புதுக்கோட்டை பொன்னமராவதியில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஊராட்சிகளில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

தொட்டியம்பட்டி ஊராட்சியில் சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் சிங்காரம், நல்லதம்பி ஆகியோர் தலைமையில் ஊராட்சி தலைவர் கீதா சோலையப்பனிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. ஜெ.ஜெ.நகரியிலிருந்து பாஸ்கர் தலைமையிலும், நல்லூர் ஊராட்சியில் வீரசேனன் தலைமையிலும், அரசமலையில் விதொச ஒன்றிய செயலாளர் ஏ.எல்.பிச்சை தலைமையிலும்,  காரையூரில் சௌந்தரராஜன் தலைமையிலும் ஒலியமங்கலம், ஆலவயல் ஊராட்சிகளில் நல்லதம்பி தலைமையிலும் கோரிக்கை மனுக்கள் அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அந்தந்த பகுதி ஊராட்சித் தலைவர்களிடம் அளித்தனர்.