மன்னார்குடி, ஜூன் 7- முத்துப்பேட்டை சாலை நீண்ட காலமாக குண்டுங்குழியுமாக இருந்தது. எத்தனையோ போராட்டங்ககளை நடத்தியப் பின் சாலைப் பணி துவக்கப்பட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த வேலை தொடர்ந்து நடைபெறவில்லை. பேரூராட்சி செயல் அலுவலர் பதவியும் காலியாக உள்ளது. இதனை கண்டித்தும் உடனே சாலைப் பணியை தொடர்ந்து முடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியம் மக்கள் மத்தியில் தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் நூதன இயக்கத்தை சிபிஎம் முத்துப்பேட்டை நகரக்குழு வெள்ளிக்கிழமை நடத்தியது. இந்த இயக்கத்திற்கு நகரச் செயலாளர் சி.செல்லதுரை தலைமை வகித்தார். விதொச ஒன்றிய செயலாளர் பி.வி.கனகசுந்தரம் தண்டோரா போடும் இயக்கத்தை துவக்கி வைத்தார். பேட்டை பத்தாவது வார்டு கே.எஸ்.பாண்டியன், 12வது வார்டு சூரியமாணிக்கம், வாலிபர் சங்க பொருளாளர் எம்.சரவணன் உள்ளிட்டோர் தண்டோரா போட்டனர். பின்னர் பேட்டை தோப்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் மற்றும் 70 பெண்கள் உள்டபட பொதுமக்கள் என 150 பேர் கலந்து கொண்டனர்.