திருச்சி, ஜூன் 6-கேரளாவில் நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிபா வைரஸ் காய்ச்சல் தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார். 7 மாவட்டங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளதாகவும் கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட கேரள எல்லையோர மாவட்டங்களுக்கு கேரளாவில் இருந்து காய்ச்சலுடன் வருபவர்களை கண்காணிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.நிபா அறிகுறிகள் என்ன எனக்கேட்டு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு மருத்துவக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உரிய முறையில் விளக்கம் அளிக்கப் படுவதாகவும் அவர் கூறினார்.