பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் வழித்தடத்தில்
புதிய பேருந்து இயக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் மண்டலம் சார்பில், பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் வழித்தடத்தில் தடம் எண்: ஏ.37 பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து அதிராம்பட்டினத்திற்கு பழைய பேருந்துக்கு பதிலாக விடியல் பயணம் புதிய நகரப்பேருந்து துவக்க விழா மாலை நடைபெற்றது. தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை ஆகியோர் கொடியசைத்து பேருந்தை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், பணியாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.