சிபிஎம் கடும் கண்டனம்
தஞ்சாவூர், மே 15- முறைகேடாக மின்மோட்டாரை பயன்படுத்தி தண்ணீர் உறிஞ்சப்படுகிறதா என சோதனை என்ற பெயரில் வீடுகளுக்குள் நகராட்சி பணியாளர்கள் அத்துமீறி நுழைவதாக பட்டுக்கோட்டையில் புகார் எழுந்துள்ளது. அத்துமீறும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் நக ராட்சியின் அடாவடி குறித்து மாவட்ட ஆட்சிய ருக்கு புகார் மனுவையும் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி அனுப்பியுள்ளார். அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில், குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்கும் வீடுகளில் நடவடிக்கைகளை எடுப்பதாக கூறி நகராட்சி ஊழியர்கள் வீடுகளில் அத்துமீறி நுழைந்து அடாவடித்தனம் செய்து வருகின்றனர். பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் உத்தர வின் பேரில், நகராட்சி உதவி பொறியாளர் தங்க துரை தலைமையில் 15 பேர் கொண்ட குழு, பட்டுக் கோட்டையில் 33 வார்டுகளிலும், நகராட்சி குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பதை பிடிக்க போகிறோம் என்று கூறி, ஆண்கள் இல்லாத வீடுகளில் கூட, அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இணைப்பில் இல்லாத மோட்டார்க ளையும் தூக்கிச் சென்று விடுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. மேலும் கொரோனாத் தொற்று பரவும் பயத்தில் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கும், இந்த நேரத்தில் தேவையில்லாத செய லாக கருதுகிறோம். நகரத்தில் கொரோனா தொற்று அபாயம் குறைந்த பிறகு இந்த நடவடிக்கை யை தொடரலாம். இந்த நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி கூறுகையில், “இதுகுறித்து பேச, நகராட்சி ஆணையரை தொடர்பு கொண்டால், அலைபேசியை எடுப்பதில்லை. அலுவலகத்திலும் பார்க்க முடியவில்லை. இதே நிலை நீடித்தால், பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம்” என்றார்.