tamilnadu

img

தஞ்சையில் குப்பைகளை சேகரிக்க நவீன வாகனம்

தஞ்சாவூர், மே 14-தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இதில் நாளொன்றுக்கு சுமார் 80 டன் குப்பை சேருகிறது. இந்த குப்பைகள் சேகரிக்கப்பட்டு சீனிவாசபுரம் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப் பட்டு வருவதால் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரித்து மறுசுழற்சி செய்ய ஏதுவாக மாநகரில் 14 இடங்களில் மைக்ரோ கம்போஸ்ட் சென்டர் என்ற மினி குப்பை தரம் பிரிக்கும் இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தற்போது பேட்டரியில் இயங்கக் கூடிய நவீன வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம் வாங்கியுள்ளது. தற்போது 30 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.விரைவில் 64 வாகனங்கள் வரவழைக்கப்பட உள்ளதாகமாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்தார்.