tamilnadu

img

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து குடவாசலில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

குடவாசல், ஏப்.16-நாகை நாடாளுமன்ற மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி வேட்பாளர் எம்.செல்வராசுவை ஆதரித்து குடவாசல் ஓகை ஆற்றுப்பாலம் அருகேதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இதே போல் வலங்கைமான், கொரடாச்சேரி ஆகிய ஒன்றியங்களில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தலைவர்கள், ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் ஆகியோரிடம் சென்று வழியெங்கும் திரண்டிருந்த பொதுமக்களை சந்தித்து நாகை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட்கட்சி வேட்பாளர் எம்.செல்வராசு,திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருக்கு போட்டியிடும் பூண்டி.கலைவாணன் ஆகியோருக்கு வாக்களித்து பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டி,வெள்ளமெனத் திரண்டு இருந்த பொதுமக்களிடம் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை நினைவுபடுத்தி பேசினார். பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும். மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். உயர் மின்னழுத்த கோபுரங்கள் விளைநிலங்கள் வழியாக அமைக்கக் கூடாது. விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலிநிர்ணயம் செய்யப்படும். அனைத்துவிவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் உள்ளிட்டவை உறுதியளித்து ஆயிரத்துக்கு மேற் பட்டோர் மத்தியில் பிரச்சாரம் செய்தார். உடன் கூட்டணி கட்சி தலைவர்கள் இருந்தனர்.

;