tamilnadu

மழை பாதிப்பில் இருந்து பயிர்களை காத்திடும் முறைகள்

தஞ்சாவூர், டிச.6- தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 4 தினங்களாக பலத்த மழை பெய்தது. தற்போது இரு தினங்களாக ஓரளவு வெயில் காணப்படுகிறது. மழை தாக்கத் தில் இருந்து பயிர்களை காத்திட பேரா வூரணி வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மாலதி ஆலோசனை வழங்கியுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “பேரா வூரணி வட்டாரத்தில் சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையின் தாக்கத்திலி ருந்து நெற்பயிர்களை பாதுகாத்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள். நெற்பயிர் மூழ்குவதை தடுத்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள். தாழ்வான பகுதிகளை இனம் கண்டு வயல்களில் தண்ணீரினை வடித்திட விவசாயிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வயலில் தேங்கும் நீரை ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்து விட வேண்டும். வடி கால் வாய்க்கால்கள் தண்ணீர் தேங்காது வடிந்து விடும் வகையில் பொதுப்பணித் துறையினரை அணுகி தக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். மழைநீரில் மூழ்கியுள்ள பயிர்களை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை கள். வயலில் தேங்கும் நீரை ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்து விட வேண்டும்.இளம் பயிர்கள் அதிக நாட்கள் நீரின் தேக்கத்தினால் தழை மற்றும்  சிங்க் சத்துக்கள் குறைபாடு ஏற்பட்டு இள மஞ்சள் அல்லது மஞ்சளாக மாறும் பட்சத்தில் தண்ணீரை வடித்தவுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ சிங்க் சல்பேட் உரத்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப் பான் மூலம் இலை வழி உரமிட வேண்டும். பயிர் தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் தண்ணீர் தேக்கத்தி னால் பாதிக்கப்பட்டால் 4 கிலோ டிஏபி-யினை 10 லிட்டர் நீரில் முந்தைய நாள் மாலை வேளையில் கரைத்து மறுநாள் வடிகட்டி அதனுடன் 2 கிலோ யூரியாவினை 190 லிட்டர் நீரில் கலந்து மாலை வேளை யில் கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமிட வேண்டும். தண்ணீர் தேக்கத்தினால் பயிர் வளர்ச்சி குன்றி காணப்பட்டால் தண் ணீரை வடித்தவுடன் ஏக்கருக்கு யூரியா 22 கிலோவுடன், ஜிப்சம் 18 கிலோ மற்றும் வேப்பம் புண்ணாக்கு 4 கிலோவினை ஒரு நாள் இரவு கலந்து வைத்து 17 கிலோ பொட்டாஷ் கலந்து மேலுரமிட வேண்டும். நெல்பயிர் அதிக நாட்கள் நீரில் மூழ்கும் பட்சத்தில் நெல் குருத்து ஈ, இலை சுருட்டு பழு, பச்சை தத்துப்பூச்சி, குலை நோய், இலை உறை கருகல் நோய் போன்ற பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கண்டறிந்து தக்க பூச்சி நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இளம் பயிர்க ளில் தண்ணீர் தேங்கி அழுகிய நிலை ஏற் பட்டிருப்பின் இருப்பில் உள்ள நாற்றுக் களை கொண்டு ஊடு நடவு செய்ய வேண்டும் அல்லது அதிக குத்துக்கள் உள்ள நடவு பயிரினை கலைத்து பயிர் இல்லாத இடங்களில் நடவு செய்திட வேண்டும். தண்ணீர் தேங்கக் கூடிய இடங்க ளில் வருங்காலங்களில் தண்ணீர் தேக்கத்தினை தாங்கி வளரக்கூடிய இர கங்களான சுவர்ணா சப்-1, சி.ஆர்-1009 சப்-1, போன்ற இரகங்கள் நடவு செய்திட விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகி றார்கள். இது தவிர இயற்கை இடர்பாடுக ளினால் பயிர் சேதத்தினை ஈடு செய்திட பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்திடலாம். பயிர்க் காப்பீடு செய்திட டிசம்பர் 15 வரை கால அளவு உள்ளதால் உடனடியாக பேராவூரணி வட்டார விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.