tamilnadu

img

கர்ப்பிணிகளுக்கு மருத்துவ முகாம்

தஞ்சாவூர், மே 14-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தர்ராஜன் முகாமிற்கு தலைமைவகித்தார். மருத்துவ அலுவலர்கள் ரஞ்சித், ரிஸ்வானா பேகம், அம்சவாணி, கலைச்செல்வி ஆகியோர் பரிசோதனை செய்தனர். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு சுகாதார நிலைய வளாக காய்கறித் தோட்டத்தில் இயற்கை உர முறையில் விளைந்த தர்ப்பூசணி பழங்கள் வழங்கப்பட்டன.கோடைக் காலம் என்பதால் உடலில் நீர்ச்சத்து குறைவு ஏற்படும். அதனால் கர்ப்பிணி பெண்களுக்கு தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டன என வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தரராஜன் தெரிவித்தார். வட்டாரசுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், கண் மருத்துவ நுட்பநர் திரவியம், மருந்தாளுநர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;